அறிமுகமானது சாம்சங் காலக்ஸி கிராண்ட்


சாம்சங் தன் காலக்ஸி ஸ்மார்ட் போன் வரிசையில், சென்ற வாரம், டில்லியில் காலக்ஸி கிராண்ட் என்ற மாடல் மொபைல் போனை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. 

மிகப் பெரிய அளவில் 5 அங்குல டி.எப்.டி. தொடு திரை, 1.2 கிகா ஹெர்ட்ஸ் டூயல் கோர் ப்ராசசர், இரண்டு சிம் இயக்கம், ஆண்ட்ராய்ட் 4.1 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம், 8 எம்.பி. கேமரா, வீடியோ அழைப்புகளுக்கு முன்புறமாக 2 எம்.பி. திறனுடன் கூடிய கேமரா தரப்பட்டுள்ளன. 

காலக்ஸி எஸ்3, நோட் 2 ஆகியவற்றில் தரப்பட்ட மல்ட்டி விண்டோ, ஆல் ஷேர் பிளே, பாப் அப் வீடியோ, போன்ற சாப்ட்வேர் அம்சங்களும் இதில் காணப்படுகின்றன.

இதன் இரண்டு சிம் இயக்கமும் ஒரு சிறப்பைப் பெற்றுள்ளது. இதில் ஒரு சிம்மில் பேசிக் கொண்டிருக்கையில், இன்னொரு சிம்மிற்கு அழைப்பு வந்தால், அது உடனே முதல் சிம்மிற்கு பார்வேர்ட் செய்யப்படும். 

புளுடூத் 4.0, 3ஜி, வைபி, 8 ஜிபி ஸ்டோரேஜ் நினைவகம், நினைவகத்தினை அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் ஆகியவை இதன் மற்ற தொழில் நுட்ப அம்சங்கள். வழக்கமான எஸ்.எம்.எஸ்., எம்.எம். எஸ்., எப்.எம். ரேடியோ, ஆடியோ மற்றும் வீடியோ பிளேயர் ஆகியவையும் தரப்பட்டுள்ளன. 

இதன் பேட்டரி 2100 mAh திறன் கொண்டதாக உள்ளது. இந்தியாவில் இதன் அதிக பட்ச விலை ரூ.21,900 என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மொபைல் சேவை நிறுவனமான வோடபோன் வழியாக வாங்கினால், முதல் இரண்டு மாதங்களுக்கு 2 ஜிபி டேட்டா இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ளும் சலுகை கிடைக்கிறது. 

சாம்சங் நிறுவனம் இந்த போனுக்கு பிளிப் கவர் ஒன்றினையும் வழங்குகிறது.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes