மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது நீலம் புயல்


நீலம் புயல் சென்னை மகாபலிபுரம் கடற்கரையில் கரையை கடந்தது , சென்னையில் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மி்ன்சாரம் துண்டிக்கப்பட்டது. 

நீலம் புயலால் பெருமளவு ரயில்பாதைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மெரீனாவில் கடல் சீற்றம் இன்னும் குறையவில்லை. 

வங்கக்கடலில் உருவான நீலம் புயல் தற்போது மகாபலிபுரம் அருகே கரையை கடந்து ஆந்திரா நோக்கி செல்கிறது. இதனால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. 

கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதுடன், அலைகள் பல அடி உயரத்திற்கு ஆக்ரோஷமாக எழும்புகின்றன. புயல் கரையை கடக்க சுமார் 2 மணி நேரம் ஆகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதையடுத்து புயல் மாமல்லபுரம் அருகே கரைகடந்தது. இதனால் பெருமளவு சேதம் தவிர்க்கப்பட்டது.

மரங்கள் வேரோடு சாய்ந்தன:

நீலம் புயல் சீற்றம் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல இடங்களில் மின்சார கம்பங்கள் சேதமடைந்தன. இதையடுத்து சென்னை மாமல்லபுரத்தில் இருந்து அடையாறு வரை தற்காலிகமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

நீலம் புயல் கரையை கடக்கும் சூழலில், இது குறித்து ஆய்வு செய்ய முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

அப்போது, புயல் தொடர்பாக விவாதிக்கப்பட்டதுடன், முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அத்துடன் அரசு அலுவலர்கள் மாலை 3 மணியுடன் தங்களது வேலைகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பவும், புயல் கரையை கடக்கும் வேளையில், பொதுமக்கள் யாரும் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரயில்களை மெதுவாக இயக்க உத்தரவு: சென்னையிலிருந்து புறப்படும் மற்றும் வந்து சேரும் ரயில்கள் 10 கி.மீ., வேகத்திலேயே இயக்க ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், பாலத்தில் செல்லும் போது, 10 கி.மீ.,க்கும் குறைவான வேகத்தில் செல்ல ரயில் டிரைவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ரயில் பாதைகள் மாற்றம்:

நீலம் புயல் எச்சரிக்கை காரணமாக திருச்செந்தூர், ராமேஸ்வரம் உள்ளிட்ட ரயில்களின் போக்குவரத்து பாதை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தென்னக ரயில்வே முதுநிலை செய்தி தொடர்பாளர் வேணுகோபால் வெளியிட்டுள்ள மாறுதல் தகவல்களில் குறிப்பிட்டுள்ளதாவது: 

சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூருக்கு 31ம் தேதி மாலையில் கிளம்பும் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ்(16735) ரயில் வழக்கமாக விழுப்புரத்திற்கு பிறகு திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், சீர்காழி, மாயவரம், கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக திருச்சி செல்லும். 

தற்போது அந்த ரயில் விழுப்புரத்திற்கு பிறகு விருத்தாச்சலம், அரியலூர் வழியாக திருச்சி சென்றடையும். திருச்செந்தூரில் இருந்து சென்னை வரும் 16736 ரயிலும் இதே புதிய வழித்தடத்தில் செல்லும். 

இதே போல சென்னையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் 16702 ரயில் மற்றும் மறுமார்க்கத்தில், ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் 16701 ரயிலும் வழக்கமான பாதையில் இருந்து மாற்றப்பட்டு விழுப்புரம்-திருச்சி இடையிலான கார்டு ரூட்டில் இயக்கப்படுகிறது. விழுப்புரம்-மயிலாடுதுறை இடையிலான ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

16 மாவட்ட பள்ளி ,கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை:

நீலம் புயல் காரணமாக 13 கடலோர மாவட்ட மற்றும் 3 உள் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நீலம் புயல் கரையை கடக்கும் நிகழ்வு 3 மணிநேரம் ஆகும் என்பதால், சென்னை கோவளம், மாமல்லபுரத்தின் தாழ்வான பகுதிகளில் 5 ஆயிரம் வெளியேற்றப்பட்டுள்ளனர். தவிர 13 கடலோர மாவட்டங்கள், 3 உள் மாவட்டங்கள் உள்பட 16 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


ஸ்கைப் பயன்படுத்தும் ஹேக்கர்கள்


கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை பரப்பி விடும் ஹேக்கர்கள், இப்போது ஸ்கைப் புரோகிராமின் ஒரு வசதியை இதற்கெனப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். 

ஸ்கைப் புரோகிராமின் இன்ஸ்டண்ட் மெசேஜில் “lol is this your new profile pic?” என செய்தி வந்து, அதனைக் கிளிக் செய்தால், நீங்கள் செய்வதறியாமல், ட்ரோஜன் ஹார்ஸ் வைரஸ் ஒன்றை உங்கள் கம்ப்யூட்டருக்கு வெத்தலை பாக்குடன் வரவேற்பு தந்துவிட்டீர்கள் என்றாகிறது. 

இதன் மூலம் ஹேக்கர்கள் அந்த பெர்சனல் கம்ப்யூட்டரைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க முடியும். 

இந்த வைரஸ் குறித்து ஸ்கைப் பொறியாளர்களைக் கேட்ட போது, தாங்கள் இதன் தாக்கம் குறித்து அறிந்திருப்பதாகவும், கூடிய விரைவில் இதற்கான மாற்று பேட்ச் பைல் ஒன்றைத் தர இருப்பதாகவும் குறிப்பிட்டனர். 

மேலும், அண்மைக் காலத்திய ஸ்கைப் புரோகிராமினைப் பயன்படுத்துமாறு, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


ஜிமெயில் வழி எஸ்.எம்.எஸ் (SMS)


தொடர்ந்து ஏதேனும் ஒரு புதுமையான வசதியைத் தன் வாடிக்கையாளர்களுக்குத் தருவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் கூகுள், அண்மையில் ஜிமெயில் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தங்கள் ஜிமெயில் நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ். வழங்கும் வசதியைத் தந்துள்ளது. 

இந்தியா உட்பட 54 நாட்டில் உள்ளவர்களுக்கு, அவர்களின் மொபைல் போனுக்கு இதன் மூலம் எஸ்.எம்.எஸ். அனுப்பலாம். கூகுள் இதற்கான ஒப்பந்தங்களை ஒவ்வொரு நாட்டிலும் மொபைல் சேவை வழங்கும் பெரும்பாலான நிறுவனங்களுடன் மேற்கொண்டுள்ளது. 

இந்த சேவை பயன்படுத்த கட்டணம் இல்லை; முற்றிலும் இலவசமே. ஆனால், மொபைல் சேவை வழங்குபவர்கள், எஸ்.எம்.எஸ். பெறுவதற்கு கட்டணம் வசூலித்தால், எஸ்.எம்.எஸ். பெறுபவர் அதனை மொபைல் சேவை நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டியதிருக்கும். 

இந்த சேவையை எப்படி பயன்படுத்துவது எனப் பார்க்கலாம். முதலில் ஜிமெயிலில் உள்ள நீங்கள் தொடர்பு கொள்ளும் நண்பரின் மொபைல் எண்ணை ஜிமெயில் தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். நீங்கள் அனுப்பும் எஸ்.எம்.எஸ். செய்திக்கு, உங்கள் நண்பர் பதில் அனுப்பினால், அது ஜிமெயில் உரையாடல் (chat) பகுதியில் செய்தியாகக் கிடைக்கும். 

உங்கள் மொபைல் போனுக்குக் கிடைக்காது. மேலும் நீங்கள் எஸ்.எம்.எஸ். அனுப்ப முயற்சிக்கும் நேரத்தில், உங்கள் நண்பர் ஜிமெயிலைப் பயன்படுத்திக் கொண்டிருந்தால், உரையாடல் வசதியைப் பயன்படுத்தும்படி ஜிமெயில் அறிவுறுத்தும். 

இருப்பினும் நீங்கள் அனுப்பும் எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும். ஒவ்வொரு ஜிமெயில் பயனாளருக்கும், ஒவ்வொரு நாளும் 50 எஸ்.எம்.எஸ். அனுப்பும் வசதி தரப்படும். அனுப்பும் ஒவ்வொரு எஸ்.எம்.எஸ்.க்கும் ஒன்று கணக்கில் கழிக்கப்படும். எஸ்.எம்.எஸ். பெறும் உங்கள் நண்பர், உங்களுக்குப் பதில் செய்தி அனுப்பினால், உங்கள் கணக்கில் மேலும் 5 அதிகரிக்கப்படும். 

இந்தியாவில் ஏர்டெல் மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனங்கள் கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளாததால், இவற்றின் மொபைல் எண்களுக்கு ஜிமெயில் மூலம் எஸ்.எம்.எஸ். அனுப்ப முடியாது. ஏர்செல், ஐடியா, லூப் மொபைல், எம்.டி.எஸ்., ரிலையன்ஸ், டாட்டா டொகோமோ, டாட்டா இண்டிகாம் மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்களிடம் பெற்றுள்ள மொபைல் எண்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பலாம். 

இன்டர்நெட் வழி எஸ்.எம்.எஸ். செய்தியை இலவசமாக அனுப்பக் கூடிய வசதியை பல தளங்கள் தந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே sendsmsnow.com என்ற தளம் இவ்வகையில் முன்னணியில் இந்தியாவில் இயங்கி வருவது குறித்து, தகவல் வெளியிடப்பட்டது. 

இதே போல சில தளங்கள் குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் இந்த சேவையை வழங்கி வருகின்றன. அமெரிக்காவிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ண்ஞுணஞீண்ட்ண்ணணிதீ.ஞிணிட் என்ற தளத்தினைப் பயன்படுத்தலாம். இருப்பினும், மெயில் தளம் ஒன்று இந்த சேவையைத் தருவது கூகுள் மட்டுமே. இந்த ஜிமெயில் குறுஞ்செய்தி சேவையை எப்படிப் பயன்படுத்துவது எனப் பார்க்கலாம்.

1. முதலில் ஜிமெயில் தளத்தில் உங்கள் அக்கவுண்ட்டில் செல்லுங்கள். வலது பக்க மேல் மூலையில் “Settings” என்பதில் கிளிக் செய்திடவும்(படம்1). 

2. அதன் பின் “Labs” என்பதில் கிளிக் செய்திடவும்(படம்2). பின் “gmark” என்ற பிரிவிற்குச் சென்று, இதனை இயக்க “Enable” என்பதில் கிளிக் செய்திடவும்(படம்3). 

3. இறுதியாக இந்தப் பக்கத்தின் இறுதி வரை சென்று, இந்த மாற்றங்களை சேவ் செய்திடவும் (படம்4). அவ்வளவுதான்! இனி நீங்கள் ஜிமெயில் எஸ்.எம்.எஸ். செய்தி சேவையைப் பயன்படுத்தலாம். இதில் இன்னொரு இயக்கத்தினையும் இயங்குமாறு செய்துவிட்டால், எஸ்.எம்.எஸ். அனுப்புவது இன்னும் எளிதாகும். 

ஜிமெயில் லேப் பகுதியில் உள்ள “Send SMS” என்னும் பகுதிக்குச் சென்று, அதனை “Enable” செய்திடவும். இந்த வசதிக்குப் பெயர் “SMS in Chat Gadget”. இதனை இயக்கிவிட்டால், எஸ்.எம்.எஸ். அனுப்புவது  இன்னும் எளிதாகும்.


2016ல் 33 கோடி மொபைல் போன் விற்பனையாகும்



வரும் 2016ல் இந்தியாவில் 33 கோடி மொபைல் போன் விற்பனையாகும் என இத்துறையில் ஆய்வு மேற்கொண்டு வரும் கார்ட்னர் அமைப்பு தெரிவித்துள்ளது. 

நடப்பு 2013 ஆம் ஆண்டில், மொபைல் போன் விற்பனை 25 கோடியே 10 லட்சத்தைத் தாண்ட உள்ளது. இது நடப்பு 2012 ஆம் ஆண்டு விற்பனையைக் காட்டிலும் 13.5% கூடுதலாக இருக்கும். 

இந்திய மொபைல் போன் விற்பனைச் சந்தையில் கடும் போட்டி நிலவுகிறது. மொபைல் போன் தயாரித்து விற்பனை செய்வதில், ஏறத்தாழ 150 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. 

இவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள், குறைந்த விலை மொபைல் போன்களைத் தயார் செய்வதில் கவனம் காட்டி வருகின்றன. 

மொத்தத்தில் 91% போன்கள் இந்த வகையில் குறைந்த விலை மொபைல் போன்களாக உள்ளன. 

ஸ்மார்ட் போன் வாங்குவது அதிகரித்து வருவதும், முதல் முறையாக போன்கள் வாங்குவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதும், இந்நிலையில் இயங்கும் நிறுவனங்களுக்குச் சவாலாக அமைந்து வருகின்றன. 

சீன நிறுவனங்களும் பல்வேறு வழிகளில், பன்னாட்டு நிறுவனங்களுக்கு போட்டியாக இயங்குகின்றன. 

இவற்றால், இந்திய நிறுவனங்கள் மிகக் கஷ்டப்பட்டே தங்கள் விற்பனைச் சந்தையைத் தக்க வைக்க முடிகிறது.


ஆடியோ பைல் வகைகள்


இசையை ரசிப்பதிலும் அவற்றைப் பங்கிட்டுக் கொள்வதிலும் மற்றவர்களுக்கு அனுப்புவதிலும் இன்று பலவகையான ஆடியோ பைல்கள் நமக்கு உதவுகின்றன. 

எடுத்துக்காட்டாக எம்பி3 பைல்கள் இந்த வகையில் பெரிய புரட்சியை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது.கம்ப்யூட்டர் பயன்பாட்டில் உள்ள சில ஆடி@யா பைல் வகைகளை இங்கு காணலாம்.

.mp3: MPEG3 என்பதன் சுருக்கமாகும். சுருக்கமான முறையில் சிறிய பைல்களாக இசையைப் பதிவு செய்து அனுப்ப இணக்கமான பைல் பார்மட் இதுவாகும். இதனை ஒலிக்கச் செய்திட பல இலவச புரோகிராம்கள் இணையத்தில் கிடைக்கின்றன. வெகுகாலமாக மிக எளிதானதாகவும் பல வசதிகள் கொண்டதாகவும் கருதப்படுவது விண் ஆம்ப் பிளேயராகும். விண்டோஸ் மீடியா பிளேயரும் இதனை இயக்கும். 

.wav: எம்பி 3 போல இதுவும் பிரபலமான ஒரு ஆடியோ பைலாகும். டிஜிட்டல் ஆடியோவைப் பதிவதில் இதுவும் ஒரு எளிய சிறிய பைலாக உருவாகும். எம்பி3 இயக்கும் ஆடியோ பிளேயர்கள், குறிப்பாக விண்டோஸ் மீடியா பிளேயர், இதனையும் இயக்குகின்றன.

.aif: Audio interchange File format என்பதன் சுருக்கம் இது.வர்த்தக ரீதியாக வெளியிடப்படும் ஆடியோ சிடிக்களில் இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மிகச் சிறந்த முறையில் ஆடியோவை வெளிப்படுத்தலாம். துல்லிதமான இசையைத் தருவதால் இதன் பைல் அளவு பெரிதாக இருக்கும். மூன்று நிமிடம் பாடக் கூடிய பாடல் 30 முதல் 50 எம்பி வரை இடம் பிடிக்கும். விண்டோஸ் மீடியா பிளேயரைப் பயன்படுத்தி இதனை இயக்கலாம்.

.ogg: இதனை அடிக்கடி நீங்கள் காண முடியாவிட்டாலும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பைல் வகையாகும். இதனை Ogg Vorbis audio என்று கூறுவார்கள். இது எம்பி3 பைலைக் காட்டிலும் இசையைத் தெளிவாகவும் துல்லிதமாகவும். இதனையும் விண்டோஸ் மீடியா பிளேயரில் இயக்கிக் கேட்கலாம். ஆனால் அதற்கு கோடெக் (codec)என்னும் ஸ்பெஷல் பைல் வேண்டும். இதனை www.freecodecs என்ற தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளலாம். 

.wma: விண்டோஸ் மீடியா ஆடியோ பைல் என்பதன் சுருக்கம். இந்த பைல் வகையை உருவாக்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம். இந்த வகை பைல்களும் அளவில் மிகச் சிறியதாக இருக்கும். விண்டோஸ் மீடியா பிளேயரில் இதனை இயக்கி ரசிக்கலாம்.


Samsung Galaxy S3 மினி மொபைல் போன்

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், சென்ற வாரம் காலக்ஸி எஸ் 4 மினி மொபைல் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. 

ஆப்பிள் நிறுவனத்திந் ஐ போன் 5 மொபைல் போனுக்குப் போட்டியாக இதனைக் களம் இறக்கியுள்ளது. 

இதன் தொடுதிரை 4 அங்குல அகலத்தில் ஹை டெபனிஷன் டச் ஸ்கிரீனாக உள்ளது. இதன் டிஸ்பிளே தன்மை 800 து 480 பிக்ஸெல் கொண்டது. கேமரா 5 மெகா பிக்ஸெல் திறன் உடையது. 

இதன் டூயல் கோர் சிப் 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கக் கூடியது. இதன் விலையை சாம்சங் இன்னும் அறிவிக்கவில்லை. வர்த்தக ரீதியாகக் கடைகளில் கிடைக்கும் நாளையும் தெரியப்படுத்தவில்லை. 

இதன் திரை, ஐபோன் 5 அளவிற்கு இருந்தாலும், மற்ற தொழில் நுட்பத் திறன்கள் குறைப்பு, இதனை ஐ போன் அளவிற்கு உயர்த்துமா என்பதை வாடிக்கையாளர்களே சொல்வார்கள்.


மைக்ரோசாப்ட் Vs ஆப்பிள்

கம்ப்யூட்டர் பயன்பாட்டில் எப்படி "ஆப்பிள் வரும் முன், ஆப்பிள் வந்த பின்' என்று இருவேறு நிலைகளைச் சரித்திர நிகழ்வுகளாக டிஜிட்டல் உலகம் கருதுகிறதோ, அதே போல, "விண்டோஸ் 8க்கு முன், விண்டோஸ் 8க்குப் பின்' என பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாடு இனி பேசப்படும். 

இதுவரை வெளியான விண்டோஸ் போல் இல்லாமல், பெர்சனல் கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் டேப்ளட் பிசிக்கள் அனைத்திலும் இயங்கும் ஒருங்கிணைந்த ஓர் இயக்கமாக விண்டோஸ் 8 வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இது, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் போட்டியாளரான ஆப்பிள் நிறுவனம் கூட எண்ணிப்பார்க்காத புதிய முயற்சியாகும். 

ஆப்பிள் நிறுவனத்தின் சிஸ்டங்களில் மக்கள் ரசித்துப் பயன்படுத்தும் விஷயங்களை, காட்சித் தோற்றங்களைக் கொண்டு வந்து, அந்நிறுவனத்திற்குப் போட்டியாக விண்டோஸ் 8 வடிவமைக்கப்பட்டுள்ளது.


தொடர்ந்து சரியும் ஜி.எஸ்.எம். பயன்பாடு


ஆகஸ்ட் மாதத்தைத் தொடர்ந்து, சென்ற செப்டம்பரிலும், ஜி.எஸ்.எம். வகை மொபைல் போன் சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 

இந்த பிரிவில் இயங்கும், பாரதி ஏர்டெல், வோடபோன் எஸ்ஸார் மற்றும் ஐடியா செல்லுலர் ஆகிய நிறுவனங்கள் இந்த இழப்பைச் சென்ற மாதமும் சந்தித்துள்ளன. 

இந்த மூன்று நிறுவனங்களும், ஆகஸ்ட் மாதம் மொத்தம் 50 லட்சம் வாடிக்கையாளர் வரை இழந்தனர். செப்டம்பரில் மேலும் 22 லட்சம் சந்தாதாரர்கள் குறைந்துள்ளனர். 

இதிலிருந்து இந்தியாவில், ஜி.எஸ்.எம். பிரிவில் மொபைல் தொடர்பு அதிக பட்ச உச்ச கட்டத்தினை எட்டிவிட்டது தெரியவந்துள்ளது. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தாங்கள் இதுவரை வைத்திருந்து பயன்படுத்திய இரண்டாவது மற்றும் மூன்றாவது சிம் தொடர்பினைப் புதுப்பிக்காமல் விட்டுவிடுகின்றனர். 

சென்ற ஜூன் மாதத்தில் இந்த மூன்று பெரிய நிறுவனங்களும் 31.6 லட்சம் புதிய சந்தாதாரர்களையும், ஜூலை மாதத்தில் 44.2 லட்சம் பேரையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

அண்மையில் ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனம், தங்கள் நிறுவன சிம் போன்களைத் தொடர்ந்து 60 நாட்கள் பயன்படுத்தாமல் வைத்திருந்தால், இணைப்பைத் துண்டித்தது. 

வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மொத்தமாகக் குறைந்ததற்கு இது போன்ற நடவடிக்கைகளும் காரணமாயிருந்தது. பல நிறுவனங்கள், தாங்கள் வழங்கி வந்த சலுகைகளைக் குறைத்ததுடன், இலவசங்களையும் நீக்கிவிட்டன.


அளவற்ற இன்டர்நெட் விரும்பும் இந்தியர்கள்


இந்தியாவில் இன்டர்நெட் பயன்பாடு குறித்து ஆய்வு நடத்திய அமைப்பு, நம் மக்கள் எந்த கட்டுப்பாடும் இல்லாத, அளவற்ற இன்டர்நெட் இணைப்பு தரும் கட்டண திட்டங்களையே விரும்புகிறார்கள் என்று அறிவித்துள்ளது. 

ஏர்னஸ்ட் அண்ட் யங் என்னும் இந்த அமைப்பு இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா உட்பட 12 நாடுகளில் இத்தகைய ஆய்வுக் கணக்கெடுப்பினை மேற்கொண்டது. 

மாறாத ஒரே மாதக் கட்டணத்தில் அளவற்ற டேட்டா தரவிறக்கம் செய்திடும் திட்டங்களையே தங்கள் மொபைல் போன்களில் மேற்கொள்ள 54% மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். 

கணக்கெடுப்பில் கலந்து கொண்டோரில், மூன்றில் ஒருவர் டவுண்லோட் செய்யப்படும் டேட்டா அடிப்படையிலான திட்டங்களைப் புரிந்து கொள்ள இயலவில்லை எனத் தெரிவித்துள்ளனர். 

ஆனால் 31% பேர், இந்த திட்டங்களை நன்கு புரிந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் 16% பேர், பிரிட்டன் மற்றும் ரஷ்யாவில் 24% தான் இதனைப் புரிந்து கொண்டதாகக் கூறினார்கள். 

மொபைல் வழி இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்கள், மக்களிடம் தாங்கள் தரும் இணைப்பு எந்த அளவிற்குப் பாதுகாப்பானது என்றும், அதற்குத் தாங்கள் எடுக்கும் நடவடிக்கை குறித்தும் மக்களிடம் தெரிவிப்பது நல்லது என்று இந்த கணிப்பை நடத்திய நிறுவனம் அறிவித்துள்ளது. 

இந்தியாவில் இன்டர்நெட் பயன்பாட்டிற்கு அதிகம் செலவழிப்போர், 3ஜி பயன்படுத்துவோர் மட்டுமே எனவும் அறிவித்துள்ளது. ஆனால், மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு என்றும் தெரிவித்துள்ளது.


தீயாய்ப் பரவும் தகவல் தொழில் நுட்பம்


உலகின் அனைத்து நாடுகளும், அவர்களின் பொருளாதார வளத்திற்கேற்ற வகையில் தகவல் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. 

இந்த வேகம், உலகெங்கும் காட்டுத் தீயாய்ப் பரவி வருகிறது. இந்த கருத்தினை பன்னாட்டளவிலான தொலைதொடர்பு அமைப்பு (International Telecommunications Union) தெரிவித்துள்ளது. 

ஒவ்வொரு நாடும் மொபைல் போன் பயன்பாட்டில் இரண்டு இலக்க அளவில் வளர்ச்சியைக் கொண்டுள்ளன. உலக அளவில் 600 கோடி மொபைல் போன் பயன்பாடு உள்ளது. இதில் சீனா மற்றும் இந்தியா தலா நூறு கோடிக்கு மேல் மொபைல் போன் இணைப்புகளைக் கொண்டுள்ளன.

தகவல் தொழில் நுட்பத்தினை மிகவும் அதிகமாகவும், பயன் தரும் வகையிலும் கொண்டிருக்கும் நாடுகளில், ஸ்வீடன், டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் பின்லாந்து வரிசையாக இடம் பெற்றுள்ளன. 155 நாடுகளில் கணிக்கப்பட்ட ஆய்வில், இவையே முதல் நான்கு இடத்தைப் பெற்றுள்ளன. 

டிஜிட்டல் சாதனங்கள் பயன்படுத்துவதில் மக்களுக்கிடையே இருக்கும் வேறுபாடுகளை நீக்கி அனைவரும் இவற்றின் மூலம் தகவல் தொடர்பினைப் பெற வேண்டும் என்ற முனைப்புடன் நடவடிக்கை எடுக்கும் நாடுகளில், ருவாண்டா, கானா, பிரேசில், சவுதி அரேபியா, கென்யா மற்றும் பஹ்ரைன் ஆகியவை இடம் பெற்றுள்ளன. 

மொபைல் வழி பிராட் பேண்ட் இன்டர்நெட் இணைப்பு பெறுவதிலும் பயன்படுத்துவதிலும் பெரும்பாலான நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. உலக அளவில் இது 40% ஆகவும், வளர்ச்சி அடைந்த நாடுகளில் இது78% ஆகவும் உள்ளது. 

நிலையான சாதனங்கள் வழி இன்டர்நெட் இணைப்பின் எண்ணிக்கை மொபைல் வழி இன்டர்நெட் பெற்ற இணைப்புகளில் பாதியளவே உள்ளது. பிராட்பேண்ட் இணைப்பிற்கான கட்டணம் கடந்த நான்கு ஆண்டுகளில் வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் இந்த அமைப்பு அறிவித்துள்ளது.


விண்டோஸ் 8 புதிய சகாப்தம் தொடங்குகிறது


உலகின் 90 சதவிகித பெர்சனல் கம்ப்யூட்டர்களை இயக்கும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் புதிய திருப்புமுனை இயக்கமாக, விண்டோஸ் 8, வரும் வெள்ளிக்கிழமை, அக்டோபர் 26ல், வெளிவர இருக்கிறது. 

தற்போதைய விண்டோஸ் இயக்கத்தின் செயல்பாட்டினை முற்றிலுமாகப் புரட்டிப் போட இருக்கின்ற இந்த சிஸ்டத்தினைப் பயன்படுத்த, பல லட்சக்கணக்கில் மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். 

விண்டோஸ் 95 முதல் விண்டோஸ் 7 சிஸ்டம் வரை நமக்குக் கிடைத்த அனுபவங்கள் அனைத்தையும் நாம் மறந்து போகும் வகையில், இந்த இயக்கத்தில் மாறுதலான சிறப்பம்சங்கள் இருக்கின்றன. "விண்டோஸ் 8 சகாப்தம்' என புதிய ஒன்று தொடங்க இருக்கிறது.

இதுவரை வெளியான விண்டோஸ் போல் இல்லாமல், பெர்சனல் கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் டேப்ளட் பிசிக்கள் அனைத்திலும் இயங்கும் ஒருங்கிணைந்த ஓர் இயக்கமாக விண்டோஸ் 8 வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் போட்டியாளரான ஆப்பிள் நிறுவனம் கூட எண்ணிப்பார்க்காத புதிய முயற்சியாகும். 

ஆப்பிள் இன்னும் தன் மேக் இன்டோஷ் கம்ப்யூட்டருக்கென ஒன்றும் (OS X Mountain Lion) மற்றும் ஐபோன், ஐபேட், ஐபாட் டச் ஆகியவற்றிற்கென (iOS 6)ஒன்றுமாக, இரு வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைத் தந்து கொண்டிருக்கிறது. 

இவற்றின் சில கூறுகள் ஒரே மாதிரியாக இருந்தாலும், இயக்க முறைமை வேறுதான். எனவே, கம்ப்யூட்டர் பயன்பாட்டில் எப்படி ""ஆப்பிள் வரும் முன், ஆப்பிள் வந்த பின்'' என்று இருவேறு நிலைகளைச் சரித்திர நிகழ்வுகளாக டிஜிட்டல் உலகம் கருதுகிறதோ, அதே போல, ""விண்டோஸ் 8க்கு முன், விண்டோஸ் 8க்குப் பின்'' என இனி இரு பிரிவுகள் காட்டப்படும் வகையில் விண்டோஸ் 8 பயனாளர்களைத் தன் சிறப்பம்சங்களால் மாற்ற இருக்கிறது.

விண்டோஸ் 8, இதற்கு முந்தைய சிஸ்டங்களின் அடியைப் பின்பற்றி, புதிய வசதிகளுடன் அமைக்கப்பட்ட சிஸ்டம் அல்ல. முற்றிலும் புதுமையாக, அனைத்தையும் மாறுதலுக்கு உள்ளாக்கி, எதிர்பாராத வடிவமைப்பையும் கொண்டதாக இது விளங்குகிறது.

குறிப்பாக ஆப்பிள் நிறுவனத்தின் சிஸ்டங்களில் மக்கள் ரசித்துப் பயன்படுத்தும் விஷயங்களை, காட்சித் தோற்றங்களைக் கொண்டு வந்து, அந்நிறுவனத்திற்குப் போட்டியாக இதனை மைக்@ராŒõப்ட் தந்துள்ளது. 

இதில் இணைக்கப்பட்டு தரப்பட்டிருக்கும் மெட்ரோ அப்ளிகேஷன் மற்றும் தொடுதிரை பயன்பாடு, தன் நிறுவனத்திற்கு ஒரு புதிய திருப்பத்தினைத் தரும் என்று மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது. இவற்றின் மிகச் சிறப்பான சில அம்சங்களை மட்டும் இங்கு பார்க்கலாம். 

விண்டோஸ் 8 திறந்தவுடன் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் முதல் விஷயம் இன்டர்பேஸ் எனப்படும் இடைமுகம் தான். உயிர்த் துடிப்புள்ள செவ்வகக் கட்டங்கள் நம்மை வரவேற்கின்றன. உயிர்த்துடிப்பு என்று சொல்வதற்குக் காரணம் அவை அப்போதைய நிகழ்வைக் காட்டிக் கொண்டிருப்பதுதான். 

உங்களூர் சீதோஷ்ண நிலையாகட்டும், பங்குச் சந்தை நிகழ்வாகட்டும், பயன்படுத்துகிற புரோகிராம்களாகட்டும், அனைத்தும் அப்போதைக்குப் பாயத் தயாராக இருக்கும் குதிரைகளாக உங்கள் தொடுதலுக்குக் காத்திருக்கின்றன. இசைக்கப்படும் பாடல், அந்நேர உடனடிச் செய்தி, போட்டோ, காத்துக் கொண்டிருக்கும் மின்னஞ்சல் விபரம், வீடியோ, மேற்கொள்ள வேண்டிய வேலைக்கான காலம் காட்டும் காலண்டர் என நீங்கள் உடன் ரசிக்க, கேட்க, செயல்படுத்த விரும்பும் அனைத்தும் தயாராக உள்ளன.

மூன்று வகையான தொடு உணர்வினை சிஸ்டம் ஏற்றுச் செயல்படுத்துகிறது. மல்ட்டி டச் ஏற்கும் டச் பேடாக திரை உள்ளது. இரு விரல்களைக் குவித்து திரையின் குறிப்பிட்ட பகுதியைப் பெரிதாக்குவது, இரு விரல்களை எக்ஸ் மற்றும் ஒய் அச்சுக்கள் திசையில் இழுத்து காண்பது மற்றும் முனையில் விரல் வைத்து இழுத்து இயக்குவது. 

இதில் மூன்றாவதாகத் தரப்பட்டுள்ளது, வழக்கமான திரையில் இயங்கக் கூடியதாக இருக்கும். மவுஸ் மூலம் அதனை இயக்கும் வகையில் சிறப்பு கவனம் மற்றும் வடிவமைப்புடன் மவுஸ் சாதனங்களைத் தயாரிக்கும்படி ஹார்ட்வேர் தயாரிப்பாளர்களை மைக்ரோசாப்ட் கேட்டுள்ளது. 

ஸ்டார்ட் ஸ்கிரீன் அமைப்பில் கூடுதலாக தனி நபர் அமைப்பினை மேற்கொள்ள வசதிகள் தரப்பட்டுள்ளன. ஒன்றுக்கு மேற்பட்ட மானிட்டர் இணைப்புகளுக்கான மேம்பாட்டு வசதி, குழந்தைகள் பயன்பாட்டில் பெற்றோர் கட்டுப்பாடு கொள்ள கூடுதல் வசதி, குடும்ப உறுப்பினர்கள் தனித்தனியே பயன்படுத்த அமைக்கும் வசதி, ஆகியவை கூடுதல் சிறப்பாகும். 

விண் 8 சிஸ்டத்தைப் பயன்படுத்துவோர் அனைவரும் தொடர்ந்து உணர்ந்து ரசிக்கும் விஷயங்களாக, மவுஸ் மற்றும் கீ போர்ட் செயல்பாட்டின் மேம்பாடு இருக்கப் போகிறது. கர்சரை இடது அல்லது வலது மூலைக்குச் சென்று இழுப்பதில், அப்ளிகேஷன் புரோகிராம்களின் இயக்கங்கள் செயல்படுவதாய் உள்ளன. 

விண் 8 சிஸ்டத்தின் ஸ்டார்ட் ஸ்கிரீன், ஹோம் பேஜ் போல் செயல்படுகிறது. இதில் கட்டங்களைத் தொட்டால், ஒரு சில கிளிக் செய்தால், நம் புரோகிராம்கள் நமக்குக் கிடைக்கின்றன. 

பிங் தேடல் கருவிக்கான அப்ளிகேஷன்கள் செம்மைப் படுத்தப்பட்டுள்ளன. பயணங்கள், விளையாட்டு மற்றும் செய்தி என வகைப்படுத்தப்பட்டு கிடைக்கின்றன. Mail, Photos, and People அப்ளிகேஷன்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. ஸ்டார்ட் ஸ்கிரீனில் கூடுதலாக தனிநபர் செட்டிங்ஸ் அமைக்க வழி தரப்பட்டுள்ளது. 

கூடுதல் மானிட்டர் சப்போர்ட் மேம்படுத்தப் பட்டுள்ளது. விண்டோஸ் ஸ்டோர் தேடிக் காண்பது செம்மைப்படுத்தப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர் இயக்கத்திற்கான வழிகள், பெற்றோர் மேற்கொள்ளும் பாதுகாப்பு முறைமைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. வழக்கமான டெஸ்க்டாப் வேண்டுவோருக்கு, அதுவும் வழங்கப்படுகிறது. 

ஆனால், ஸ்டார்ட் பட்டன் இல்லாமல் கிடைக்கிறது. டாஸ்க் பார் மற்றும் சிஸ்டம் ட்ரே தரப்படுகின்றன. விண்டோஸ் கீ அழுத்தினால், கட்டங்களுடன் உள்ள விண் 8 திரைக்கு மாறிக் கொள்ளலாம். ஒரு மானிட்டரில் டெஸ்க்டாப் திரையுடனும், இன்னொன்றில் விண் 8 திரையுடனும் இயங்கலாம். “Refresh your PC” என்ற பட்டனை அழுத்தி சிஸ்டத்தினை இன்ஸ்டால் செய்திடலாம். 

“Restore Points” போல “Refresh Points” ஏற்படுத்தி, விரும்பும் நாளில் இயங்கிக் கொண்டிருந்த நிலையில் சிஸ்டத்தைப் பெறலாம். Task Manager மற்றும் Windows Explorer புதுப்பிக்கப்பட்டு புதிய செயல்பாட்டைக் கொண்டுள்ளன. விண்டோஸ் இயக்க செயல்பாடு ஒவ்வொன்றிலும் புதிய வழிமுறைகள், செயல்முறைகள் தரப்பட்டு பயனாளர்களை ஆச்சரியப்பட வைக்கின்றன.

விண்டோஸ் 8 சிஸ்டத்தைத் தனியாகவும், ஏற்கனவே இருக்கின்ற சிஸ்டத்தின் மேம்பாடாகவும் பெற்றுக் கொள்ளலாம். 

விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்கள், தங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அப்படியே விண்8க்கு மாற்றிக் கொள்ளலாம். புரோகிராம்கள், விண்டோஸ் செட்டிங்ஸ், யூசர் அக்கவுண்ட்ஸ் மற்றும் பைல்கள் அனைத்தும் தானாக மாற்றம் செய்யப்பட்டு பயன்படுத்தக் கிடைக்கும். விண் 8 சிஸ்டம் பயன்படுத்தத் தொடங்கிய பின்னர், மீண்டும் விண்டோஸ் 7 அல்லது விஸ்டாவிற்கு மாற வேண்டும் எனில் மாறிக் கொள்ளவும் வசதி தரப்பட்டுள்ளது. ஆனால், எக்ஸ்பிக்குச் செல்ல முடியாது. 

முற்றிலும் புதிய வகையில் செயல்பட இருக்கும் விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மக்கள் மாறுவார்களா? நிச்சயம் மாறுவார்கள், மாற்றிக் கொள்வார்கள் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். டாஸ் இயக்கத்தினை அடுத்து மவுஸ் இணைந்த விண்டோஸ் இயக்கம் வந்த போது, பலர் தயங்கினர்; 

ஆனால் பல புரோகிராம்களை ஒரே நேரத்தில் இயக்கும் வசதி போன்ற பல வசதிகள், அப்படியே விண்டோஸ் இயக்கத்திற்கு மக்களை மாற வைத்தது. ஆனால், இப்போது மக்கள் தங்கள் ஸ்மார்ட் போன் மற்றும் டேப்ளட் பிசிக்களில் தொடுதிரை பயன் பாட்டினை நன்கு அறிந்து வைத்துள்ளனர். எனவே நிச்சயம் பெர்சனல் கம்ப்யூட்டரில் தொடு திரை இணைந்த வசதிகளை மனமுவந்து ஏற்றுக் கொள்வார்கள்.


ஜிமெயில் - சில கூடுதல் தகவல்கள்


கூகுள் தரும் ஜிமெயிலில் எண்ணற்ற வசதிகள் உள்ளன. அவற்றில் சில வசதிகளை மட்டுமே பயன்படுத்தி வருகின்றோம். இங்கு நாம் அதிகம் பயன்படுத்தாத, சில முக்கிய வசதிகளைக் காணலாம்.


1. அஞ்சல் செய்தியில் ஸ்டார்:

நாள் தோறும் பல மின்னஞ்சல் செய்திகள் நமக்கு வருகின்றன. இவற்றில் ஒரு சில முக்கியமானவையாக இருக்கும். ஒரு சிலவற்றிற்கு கட்டாயம் சில நாட்களில் பதில் அனுப்ப திட்டமிடுவோம். மொத்த அஞ்சல்களில் இவற்றை எப்படி விலக்கிப் பார்ப்பது. 

இதற்கெனவே, இந்த அஞ்சல்களில் ஸ்டார் அமைத்து குறியிடும் வசதி தரப்பட்டுள்ளது. உங்கள் இன்பாக்ஸில், செய்தியை அடுத்து இடதுபக்கம் ஸ்டார் குறியிடும் இடம் தரப்பட்டுள்ளது. அனுப்பியவரின் பெயர் அடுத்து இது காணப்படும். 

இதில் ஒரு கிளிக் செய்தால், அதில் ஸ்டார் அடையாளம் இடப்பட்டு தனித்துக் காட்டப்படும். பின் ஒரு நாள் தேடுகையில், இந்த ஸ்டார் அமைந்துள்ள செய்திகளை மட்டும் தேடலாம். 

சரி, நீங்கள் எழுதும் அஞ்சலை எப்படி ஸ்டார் அமைப்பது? மெசேஜ் மேலாக இருக்கும் Labels என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர் Add star என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

முக்கியமானது என்று நீங்கள் குறிக்க விரும்பும் செய்திகளில் பல தரப்பட்டவை இருக்கலாம். சில உங்கள் வேலை சார்ந்ததாக இருக்கலாம். சில உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து வந்திருக்கலாம். இவற்றை வேறுபடுத்தி முக்கியம் எனக் காட்ட, இந்த ஸ்டார்களை வெவ்வேறு வண்ணத்தில் அமைக்கலாம். 

பல வண்ணங்களில் அமைக்க, முதலில் அவற்றை நீங்கள் தேர்ந்தெடுத்து உங்கள் பயன்பாட்டிற்கு வைத்திருக்க வேண்டும். இதற்கு, ஜிமெயில் பக்கத்தில், மேல் வலது பக்கத்தில், கியர் ஐகானில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் கீழ்விரி பட்டியலில், Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு General என்ற டேப்பில் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும். 

இந்தப் பக்கத்தில் "stars" என்ற பிரிவைத் தேடிக் காணவும். இதில் மஞ்சள் வண்ண ஸ்டார் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும். கீழாக மேலும் சில வண்ணங்களிலும் ஸ்டார் காட்டப்படும். எவை வேண்டுமோ, அவற்றின் மீது கிளிக் செய்து மேலே, மஞ்சள் ஸ்டார் அருகே வைக்கவும். ஸ்டார் மட்டும் இன்றி, மேலும் சில குறியீடுகளையும் காணலாம். 

இவற்றை விரும்பினால், அவற்றையும் அதே போல் இழுத்து மேலே வைக்கவும். இதன் பின்னர், கீழாகச் சென்று Save Settings என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். இனி ஜிமெயில் பக்கத்தில் ஒரு செய்தியை ஸ்டார் செய்திடுகையில் முதலில் மஞ்சள் ஸ்டார் கிடைக்கும். 

தொடர்ந்து கிளிக் செய்திட, அடுத்தடுத்த வண்ணங்களில் ஸ்டார்கள் காட்டப்படும். எதனை அமைக்க விருப்பமோ, அது கிடைக்கும்போது கர்சரை எடுத்துவிடலாம்.

இவ்வாறு ஸ்டார் அமைத்த செய்திகளைத் தேடிப் பெறலாம். குறிப்பிட்ட வண்ணத்தில் அமைந்த செய்திகளைத் தேடுகையில் “has:” என்பதைப் பயன்படுத்தி தேடலாம். எடுத்துக்காட்டாக, தேடலை “has:yellowstar” என அமைக்கலாம்.


2. திரையில் செய்தி எண்ணிக்கை:

ஒரு நேரத்தில் திரையில் எத்தனை செய்திகள் காட்டப்பட வேண்டும் என்பதனை மூன்று ஆப்ஷன்கள் மூலம் அமைக்கலாம். கியர் ஐகானில் கிளிக் செய்தால், கிடைக்கும் பட்டியலில், Comfortable, Cozy மற்றும் Compact என மூன்று ஆப்ஷன்கள் கிடைக்கும். இதில் தேவையானதைத் தேர்ந்தெடுத்து அமைத்து, திரைக் காட்சியில் வேறுபாட்டினைக் காணலாம்.


3. வீடியோ வழி பேச்சு:

ஜிமெயில் செய்திகளைக் காண்கையில்,வெளி ஊரில், வெளி நாட்டில் வாழும் உங்கள் நண்பரும் ஜிமெயில் பார்த்துக் கொண்டிருந்தால், உடனே அவரை அழைத்து, அவர் முகத்தினைப் பார்த்து உங்கள் அன்பைத் தெரிவிக்கலாம். வீடியோ காட்சியாக இது கிடைக்கும். இதனை உங்கள் ஜிமெயிலில் செயல்படுத்த Gmail voice and video chat இன்ஸ்டால் செய்யப்பட வேண்டும். இதனை எளிதாக, டவுண்லோட் செய்து பதிந்து கொள்ளலாம்.


4. லேபில்களில் மின்னஞ்சல்கள்:

லேபில்கள் ஜிமெயிலில் போல்டர்கள் போலச் செயல்படுகின்றன. முக்கியமான மெயில்களுக்கு நல்ல வண்ணத்தில் லேபில்களைக் கொடுத்தால், அவற்றை எளிதாகத் தேடிப் பெறலாம். இதில் என்ன விசேஷம் என்றால், ஒரு மின்னஞ்சல் செய்திக்கு ஒன்றுக்கு மேற்பட்ட லேபிலை வழங்கலாம். நண்பர்கள் "Friends" என்ற லேபிலையும், உடனே பதில் போடு "Reply soon" என்பதற்கான லேபிலையும், ஒரே செய்திக்கு வழங்கலாம். 

லேபிலை உருவாக்க, ஜிமெயில் பக்கத்தின் இடது புறத்தில், லேபில் லிஸ்ட் கீழாக உள்ள More என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு Create new label என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு உங்கள் புதிய லேபிலின் பெயரை டைப் செய்து, பின்னர் Create என்பதில் கிளிக் செய்திடவும்.

செய்தியை லேபிலில் அமைப்பதற்குப் பல வழிகள் உள்ளன. செய்திகளுக்கு அடுத்து உள்ள செக் பாக்ஸைக் கிளிக் செய்து, பின் குறிப்பிட்ட லேபிலைக் கிளிக் செய்திடலாம். செய்தியைப் படிக்கும் போது, லேபில் பட்டனில் கிளிக் செய்து, லேபிலை அமைக்கலாம். மெசேஜ் எழுதினால், அதனை அனுப்பும் முன் லேபில் பட்டனில் கிளிக் செய்து, லேபிலிடலாம். 

லேபிலை நீக்க, வண்ணத்தை மாற்ற, அந்த லேபில் அருகே உள்ள கீழ்நோக்கிய அம்புக் குறியினை கிளிக் செய்திடவும். இங்கு ஒரு மெனு கிடைக்கும். இதில் வண்ணம் மாற்றுதல், பெயர் மாற்றுதல், போன்ற பல மாற்றத்தை மேற்கொள்ளலாம். எப்படி போல்டர்களுக்குள், துணை போல்டர்களை உருவாக்குகிறோமோ, அதே போல இங்கு லேபில்களுக்கும், துணை லேபில்களை உருவாக்கலாம். 


5. மெயில்களை வடிகட்டுதல்:

ஜிமெயிலில் நமக்கு வரும் எண்ணற்ற மெயில்களை வடிகட்டிப் பயன்படுத்த, இதற்கான வடிகட்டிகள் (filters) உதவுகின்றன. இவற்றைப் பயன்படுத்தி, மெயில்கள் தாமாகவே, குறிப்பிட்ட லேபில்களில் இணையும்படி செய்திடலாம்; ஆர்க்கிவ் எனப்படும் இடங்களில் பாதுகாக்கலாம்; அழிக்கலாம்; ஸ்டார் அமைத்து வேறுபடுத்தலாம் அல்லது மற்றவர்களுக்கு பார்வேர்ட் செய்திடலாம்.

வடிகட்டிகளை உருவாக்குதல்: இந்த filter எனப்படும் வடிகட்டியை உருவாக்குவது எப்படி என்று பார்க்கலாம். 

1. ஜிமெயில் தளத்தில் உள்ள சர்ச் பாக்ஸ் ஓரமாக உள்ள கீழ் விரி அம்புக் குறியில் கிளிக் செய்திடவும். உங்களுடைய தேடல் வகை என்ன என்று பெற்றுக் கொள்ள ஒரு விண்டோ காட்டப்படும். 

2. உங்களுடைய தேடல் வகையினை இதில் இடவும். உங்கள் தேடல் சரியாக அமைக்கப்பட்டுள்ளதா என உறுதி செய்திட சர்ச் பட்டனை அழுத்திக் கிடைக்கும் அஞ்சல் தகவல்களைப் பார்த்து உறுதி செய்திடவும். 

3. சரியாக இருந்தது என்றால், இந்த சர்ச் விண்டோவில் கீழாக உள்ள Create filter with this search என்பதில் கிளிக் செய்திடவும்.

4. இனி இந்த வடிகட்டி மூலம் என்ன செயல்பாட்டினை மேற்கொள்ளலாம் என்று இங்கு தேர்ந்தெடுக்கவும். பலர், இவற்றை மெயில்கள் தாமாக, குறிப்பிட்ட லேபில் கீழ் அமையும்படி அமைக்கின்றனர். இதனால், இன்பாக்ஸ் அடைபடாமல், மெயில்கள் தாமாக, தனி லேபில் பெட்டியை அடைகின்றன. 

நமக்கு நேரம் கிடைக்கையில் இவற்றைத் திறந்து பார்க்கலாம். இதற்கு Skip the Inbox (Archive it) and Apply the label என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். இப்படியே பலவேறு வேலைகளுக்கான வடிகட்டிகளை உருவாக்கலாம்.

5. அடுத்து Create filter என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது வடிகட்டி தயார். நீங்கள் வடிகட்டிகளைத் தயார் செய்தவுடன், அதில் செட் செய்ததற்கேற்ற மெயில்கள் அனைத்தும் வடிகட்டப்பட்டு, அந்த அந்த பிரிவுகளில் ஒதுங்கும். ஏற்கனவே கிடைக்கப்பட்ட மெயில்களும் அந்த வகையில் இருந்தால், அவையும் ஒதுக்கப்படும். 

ஆனால், செயல்பாடுகள் பின்னால் வரும் மெயில்களில் மட்டுமே மேற்கொள்ளப்படும். எடுத்துக்காட்டாக, குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரியிலிருந்து வரும் மெயில்களை இன்னொரு மின்னஞ்சல் முகவரிக்கு பார்வேர்ட் செய்யும்படி வடிகட்டி ஒன்று அமைக்கப்பட்டால், அமைக்கப்பட்டதற்குப் பின்னர் வரும் மெயில்கள் மட்டுமே பார்வேர்ட் செய்யப்படும்.


கூகுளின் அசத்தலான ப்ராஜக்ட் - டிரைவர் இல்லாமல் ஓடும் கார்

இணைய உலக ஜாம்பவானிடமிருந்து... இதோ இன்னும் ஒரு படைப்பு’ என்று போஸ்டர் அடித்து ஒட்டலாம். அந்த அளவுக்கு அசத்தலானது கூகுளின் இந்த ப்ராஜக்ட். 

அதாவது, டிரைவரே இல்லாமல், சாலையில் கார் ஓட்டும் ப்ராஜக்ட். கேட்கவே மலைப்பாக உள்ள இந்த அறிவியல் மாயாஜாலத்தை கிட்டத்தட்ட நிஜமாக்கிக் காட்டிவிட்டது கூகுள். 

ஆம், பரிசோதனை முயற்சியாக இயக்கப்பட்ட கூகுளின் டிரைவர் இல்லா கார்கள், எந்த விபத்தும் இல்லாமல் இப்போது 4 லட்சத்து 80 ஆயிரம் கிலோ மீட்டர்களைக் கடந்துள்ளன. 

நல்ல டிரைவர் கிடைக்காமல், கார் ஓட்டவும் தெரியாமல் அவதிப்படும் அத்தனை பேருக்கும் இது மகத்தான வரப்பிரசாதம்! தானே தன்னை ஓட்டிக் கொள்ளும் கார் என்பது, வெகுகாலமாகவே கூகுள் கண்ட கனவு. 

அதற்கான பணிகளும் ஆராய்ச்சிக் கூடத்தில் செய்யப்பட்டு வந்தன. ஆனால், ரோட்டில் இறக்கி பரிசோதிக்க முடியவில்லை. காரணம், சட்ட சிக்கல். கார் ஓட்டும் டிரைவர் குடித்திருக்கக் கூடாது, தகுந்த லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும் என்றெல்லாம் உலக நாடுகளில் பல சட்டங்கள் உள்ளன. 

ஆனால், டிரைவரே இல்லாமல் ஒரு கார் இயங்கலாமா? என்றால் அனைவரின் பதிலும் மௌனமே. இப்படியொரு காருக்கு அனுமதி தர எந்த நாடும் முன் வராத நிலையில், அமெரிக்காவின் நெவாடா மாகாண அரசாங்கம் மட்டும் கைகொடுத்தது. 

தானியங்கி கார்களுக்காக தனியே ஒரு சட்டம் இயற்றி, கூகுளின் இந்தப் பரிசோதனைக் கார்களுக்கு உரிமம் தந்தது. அதன் மூலம் உரிமம் பெற்ற 12 கார்களை அந்த மாகாணத்தில் இயக்கியது கூகுள். 

அதில் ஒரு கார் மட்டும் விபத்தை சந்தித்து திரும்பப் பெறப்பட்டு விட்டாலும், மற்ற கார்கள் வெற்றி கரமாக 4 லட்சத்து 80 ஆயிரம் கிலோமீட்டரைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கின்றன. 

கூகுளின் இந்த ‘டிரைவர் இல்லா தொழில்நுட்பம்’ எந்தக் காரில் வேண்டுமானாலும் வாங்கிப் பொருத்திக் கொள்ளக் கூடியதாகத்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

காரின் நாலாபுறமும் இணைக்கப்பட்டுள்ள சென்சார்கள் மற்றும் கேமராக்கள் மூலம், அருகில் வரும் கார்கள், மனிதர்கள், பள்ளம், மேடு, வளைவு, திருப்பம் என எல்லாம் கிரகிக்கப்பட்டு, காரில் உள்ள ஒரு ப்ராசஸருக்கு அனுப்பப்படுகிறது. அந்தத் தகவல்களைக் கொண்டு, காரின் ஆக்ஸிலரேட்டர், பிரேக், கியர் போன்றவற்றை அந்த ப்ராச ஸரே கட்டுப்படுத்துகிறது. 

இதுதான் கூகுளின் தொழில்நுட்பம். மிகவும் எளிமையான தொழில்நுட்பம்தான். ஆனால், அது எத்தனை துல்லியமாக செயலாற்றும் என்பதே மில்லியன் டாலர் கேள்வி. 

அதற்காகத்தான் இத்தனை பரிசோதனைகளில் பாஸான பிறகும் இதை மார்க்கெட்டுக்குக் கொண்டு வராமல் இருக்கிறது கூகுள். ‘‘இன்னும் எங்களின் கார் பனி மூடிய சாலைகளிலும் தற்காலிக டிராஃபிக் சிக்னல்களிலும் சரியாக செயல்பட்டுக் காட்ட வேண்டும். 

அப்போதுதான் இது முழுமையடையும்’’ என்கிறார் இத்திட்டத்தின் சீனியர் பொறியாளர் கிரிஸ் ஆர்ம்சன். அப்படி முழுமை அடைந்த பின்னர், டொயோட்டா மற்றும் ஆடி நிறுவனங்களோடு இணைந்து இந்தத் தொழில்நுட்பத்தை வாடிக்கையாளர்களிடம் கொண்டு வர இருக்கிறது கூகுள். 

அப்படியே நம்ம ஊர் புழுதி சாலைகள்லயும் ஓட்டிப் பார்த்துட்டு மார்க்கெட்டுக்கு கொண்டு வந்தா, நாமும் நம்பி வாங்கலாம்!


மொபைல் போன் தொழில் நுட்பம்


மொபைல் போன்கள் குறித்த தகவல்களில் நாம் அடிக்கடி சந்திக்கும் சொற்கள், சுருக்குச் சொற்கள் குறித்து இங்கு அறியலாம்.

AGPS – Assisted Global Positioning System:

இன்டர்நெட் மற்றும் அதில் இணைந்த சர்வர்கள் வழியாக தேவையான சாட்டலைட்களிலிருந்து தகவல்களைப் பெற்றுத் தரும் சிஸ்டம். GPS இயக்கக் கூடிய மொபைல் போன்கள் AGPS இல்லாமலேயே தகவல்களைப் பெறும் தகுதி பெற்றவையாகும். 

ஆனால் அதற்கான நேரம் சற்று அதிகமாகும். AGPS பயன்படுத்த உங்கள் மொபைல் போன்களில் இன்டர்நெட் இயக்கும் சேவையைப் பெற்றிருக்க வேண்டும். இதனை உங்களுக்கு மொபைல் போன் சர்வீஸ் தரும் நிறுவனம் வழங்கும்.

Android:

இது கூகுள் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட போன். Open Handset Alliance என்னும் அமைப்பின் ஆஸ்தான போன் மாடலாக உள்ளது. இது போன் மட்டுமின்றி ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டமும் ஆகும். 

இது லினக்ஸ் கெர்னல் கட்டமைப்பினை அடிப்படையாகக் கொண்டது. இது ஏறத்தாழ ஓப்பன் சோர்ஸ் சாப்ட்வேர் தொகுப்பினை ஒத்ததாகும். ஜாவாவுடன் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் குறியீடுகளை இணைத்து இதற்கான கூடுதல் பயன் தரும் புரோகிராம்களை புரோகிராம் எழுதத் தெரிந்த யாவரும் அமைக்கலாம் என்பது இதன் சிறப்பு. முதன் முதலாக இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வந்த மொபைல் போன் எச்.டி.சி. நிறுவனத்தின் எ1 போனாகும். 

Bluetooth:

வயர்லெஸ் தொடர்பினை இது குறிக்கிறது. டேட்டாக்களை மாற்றுவதற்கும் ரிமோட் வகை அணுகுமுறைக்கும் கட்டுப் பாட்டிற்கும் இது பயன்படுத்தப்படுகிறது. இதன் வகைகள்: Bluetooth 2.0 + EDR : Bluetooth (BT) with Enhanced Data Rate என்பதன் சுருக்கம். இந்த தொழில் நுட்பத்தின் கீழ் புளுடூத் இணைப்பில் உள்ள சாதனங்கள் இடையே மிக வேகமாக தகவல் பரிமாற்றத்திற்கு இது உதவுகிறது. 

A2DP - Advanced Audio Distribution Profile:

இந்த தொழில் நுட்பத்தின் மூலம் புளுடூத் இணைந்த சாதனங்களில் இøணைக்கப்பட்டுள்ள ஹெட்செட்களில் சிறந்த முறையில் ஆடியோ வினை ரசிக்க முடியும். 

AVRCP - Audio/Video Remote Control Profile:

இதன் மூலம் புளுடூத் மூலம் இøணைக்கப்பட்டுள்ள சாதனங்கள் இடையே டேட்டா பரிமாற்றத்தினை இன்னும் சற்று விரிவாக மேற்கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள மீடியா பிளேயரை புளு டூத் மூலம் இணைப்பு பெற்ற மொபைல் போன் மூலம் கட்டுப்படுத்த முடியும். மொபைல் போனில் புளுடூத் மட்டுமின்றி அதில் AVRCP profile இருக்க வேண்டும். 

CDMA - Code division multiple access:

இதுவும் ஒரு வகை மொபைல் போன் இணைப்பு தொழில் நுட்பமாகும். ஜி.எஸ்.எம். என்னும் மொபைல் தொழில் நுட்பம் மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்டாலும் சி.டி.எம்.ஏ. தொழில் நுட்பம் மிகச் சிறந்த மொபைல் தொழில் நுட்பமாக மதிக்கப்படுகிறது. 

இந்த தொழில் நுட்பம் இரண்டாம் உலகப் போரின் போது முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டது. தற்போது அனைத்து நாடுகளிலும் இந்த தொழில் நுட்பத்தில் இயங்கும் போன்களும் உள்ளன. தொடக்கத்தில் இந்த வகை மொபைல் போன்களில் சிம் கார்ட் போனிலேயே அமைக்கப்பட்டு தரப்பட்டன. தற்போது தனியாகவும் கிடைக்கின்றன. 

CMOS Sensor – Complementary Metal Oxide Semiconductor:

இந்த செமி கண்டக்டர்கள் மொபைல் போன்களில் உள்ள கேமராக்களில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஏனென்றால் இந்த சென்சார் செயல்பட ஒரு சில பாகங்கள் இருந்தால் போதும். அதனாலேயே மொபைல் போன் போன்ற சிறிய சாதனங்கள் இதனைப் பெரும் அளவில் பயன்படுத்துகின்றன. மேலும் குறைவான மின்சக்தி இவை இயங்கப் போதுமானது. இதன் விலையும் குறைவு.

EDGE - Enhanced Data rates for GSM Evolution:

இது மொபைல் போன்களுக்கான நெட் வொர்க் அமைக்கத் தேவையான தொழில் நுட்பத்தினைக் குறிக்கிறது. இதனை EGPRS அல்லது Enhanced GPRS என்றும் அழைக்கலாம். இது GPRSக்கும் ஒரு படி நவீனமானது. மொபைல் போனில் இன்டர்நெட் பிரவுசிங் அனுபவத்தை வேகமாக வழங்கவல்லது. டேட்டா பரிமாற்றமும் வேகமாக நடைபெறும்.

GSM - Global System for Mobile communications (originally from Groupe Spécial Mobile):

இந்த தொழில் நுட்பத்தின் மூலம் மொபைல் போன்கள் தங்களுக்கு மொபைல் சர்வீஸ் தரும் சர்வீஸ் நிறுவனங்களுடன் இணைத்துக் கொள்ள முடியும். அல்லது உலகின் எந்த ஒரு சர்வீஸ் புரவைடருடன் இணைத்துப் பயன்படுத்த முடியும். ஜி.எஸ்.எம். மொபைல் போன்கள் சிம் கார்டுடன் பயன்படுத்தப் படுகின்றன.


பேஸ்புக் வலைதளத்தில் 6.50 கோடி இந்தியர்கள்



பேஸ்புக் சமூக வலைதளத்தில் இணைந்த இந்தியர்களின் எண்ணிக்கை, 6.50 கோடியாக அதிகரித்துள்ளது. 

இது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 80 லட்சமாக இருந்தது என, "பேஸ்புக்' இந்தியா நிறுவனத்தின் தலைவர் கிரித்திகா ரெட்டி தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

உலக அளவில், இணையதளம் பயன்படுத்துவதில், இந்தியாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. இந்தியாவில், அலைபேசி, கம்ப்யூட்டர், லேப்-டாப் உள்ளிட்ட சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இதனால், நகரம் மற்றும் கிராமப்புறங்களில், பேஸ்புக் வலைதளத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தியாவில், இணையதளம் மூலம் மேற்கொள்ளப்படும் விளம்பர சந்தை ஆண்டுக்கு, 25 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. 

நடப்பாண்டு, ஆகஸ்ட் மாதம் வரையிலுமாக, இந்தியாவில், "பேஸ்புக்' பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 5 கோடி என்ற அளவில் இருந்தது. 

தற்போது, இந்த எண்ணிக்கை, 6.50 கோடியாக அதிகரித்துள்ளது. இவ்வாறு கிரித்திகா கூறினார்.


டேபிள் செல்களை இஷ்டப்படி இணைக்க


வேர்டில் டேபிள்களை அமைக்கையில், நம் இஷ்டப்படி செல்களை அமைக்க வசதிகள் உள்ளன. எத்தனை நெட்டு வரிசை, படுக்கை வரிசை எனக் கொடுத்து டேபிள்களை முதலில் அமைக்கிறோம். 

பின்னர், சில செல்களை நம் தேவைக்கென இணைத்து அமைத்து, அவற்றில் டேட்டாக்களை இடுகிறோம். இந்த செல்களை இணைக்க, Table மெனுவில் Merge Cells என்பதனைப் பயன்படுத்துகிறோம். 

செல்களைத் தேர்ந்தெடுத்து, இந்த Merge Cells மேல் கிளிக் செய்தால், செல்கள் இணைக்கப்பட்டு கிடைக்கும். ஆனால், இணைக்கப்படும் செல்கள் வரிசையாக சீராக இல்லாமல் நமக்கு இணைத்து தேவைப்பட்டால் என்ன செய்யலாம்? அதற்கென வேர்ட் நமக்குத் தரும் வசதிகளை இங்கு பார்க்கலாம். 

1. View மெனு கிளிக் செய்து, கிடைக்கும் பட்டியலில், Toolbars என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் அடுத்து கிடைக்கும் துணை மெனுவில் Tables and Borders என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது என்ற டூல் பார் கிடைக்கும். 

2. இந்த டூல் பாரினை உங்கள் டேபிள் அருகே மேலாக இழுத்து வைத்துக் கொள்ளவும். இதனால், உங்கள் டேபிள் மற்றும் டூல் பாரினை நன்றாக, அருகருகே காணலாம்.

3. இனி டூல் பாரில் Eraser டூல் கட்டத்தினைத் தேர்ந்தெடுக்கவும். இது பென்சில் போன்ற டூல் அருகே அதன் வலது பக்கம் இருக்கும்.

4. இனி இணைக்கப்பட வேண்டிய செல்களைப் பிரிக்கும் கோடுகள் மீது இந்த எரேசர் டூலினை இழுக்கவும். இழுத்து மவுஸ் பட்டனை விட்டுவிட்டால், உடனே அந்த கோடுகள் மறைந்து, செல்கள் ஒரே செல்லாகக் காட்சி தரும். 

5. இப்படியே, நீங்கள் விரும்பும் எந்த செல்களையும், அவை எந்த வரிசையில் இருந்தாலும், தேர்ந்தெடுத்து இணைக்கலாம். இணைத்து முடித்த பின்னர், எரேசர் டூலினை மீண்டும் அதன் இடத்தில் சென்று விட்டுவிட வேண்டும். 

அல்லது எஸ்கேப் (Esc)கீயினை அழுத்த வேண்டும். இது எரேசர் டூல் இயக்கத்தினை நிறுத்திவிடும். இறுதியாக Tables and Borders என்ற டூல்பாரினை குளோஸ் செய்து மூடிவிடலாம்.


வேர்ட் டாகுமெண்ட் தேதியைத் தானாக மாற்ற


வேர்ட் தொகுப்பில் ஆவணங்களை உருவாக்குகையில், அதில் உள்ள தேதியினை, பயன்படுத்தும் நாளுக்கேற்றபடி அமைக்க விரும்புவோம். 

எடுத்துக் காட்டாக, ஒரு கடிதம் பலரை வெவ்வேறு நாட்களில் சென்றடைய வேண்டியதிருக்கலாம். இது ஒரே நாளில் அச்செடுத்து அனுப்பப்படாமல், பல நாட்களில் அனுப்பப் படலாம். 

அப்போது தேதியை, அந்த அந்த நாளில் திருத்தாமல், தானாகவே வேர்ட் அன்றைய தேதிக்கு மாற்றிக் கொள்ளும்படி அமைத்துவிடலாம். இதற்கான வழிகளைப் பார்ப்போம். 

இங்கு ஆவணம் அல்லது அதற்கான டெம்ப்ளேட் என்று சொல்லப்படும் கட்டமைப்பில் இந்த மாற்றத்திற்கான வழி முறையினை மேற்கொள்ளலாம். 

1. கர்சரை ஆவணத்தின் எந்த இடத்தில் தேதி தானாக மாற வேண்டுமோ அங்கு அமைக்கவும். 

2. அடுத்து Insert | Date And Time செல்லவும்.

3. Available Formats என்ற பெட்டியிலிருந்து, தேதி எந்த வடிவில் அமைக்கப்பட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இந்த எடுத்துக் காட்டுக்களில், நீங்கள் என்று இதனை அமைக்கிறீர்களோ, அந்த தேதி காட்டப்படும். இதே தேதி தான் அமைக்கப்படுமோ என்று குழப்பமடைய வேண்டாம். விருப்பப்படும் வகையிலான வடிவத்தினைத் தேர்ந்தெடுக்கவும். 

4. பின்னர், Update Automatically என்று இருக்கும் இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தி, பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

இங்கு தேதி, தேதியாக அமைக்கப்படாமல் ஒரு பீல்டாக அமைக்கப்பட்டுள்ளது. (இந்த பீல்டு குறியீடு எப்படி அமைக்கப்பட்டுள்ளது என்று அறிய, சிறிது நிழல் படிந்தாற்போல் இருக்கும் இதன் மீது ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் பட்டியலில் Toggle Field Codes என்பதில் கிளிக் செய்து பார்க்கவும்.) 

இனி ஒவ்வொருமுறை, இந்த ஆவணத்தைத் திறக்கும்போதும், அச்சடிக்கும் போதும், இந்த இடத்தில், அன்றைய நாளுக்கான தேதி, நீங்கள் தேர்ந்தெடுத்த வடிவத்தில் கிடைக்கும்.

இதற்கு மாறாக, இந்த இடத்தில் ஒரே தேதி தான் வேண்டும் என விரும்பினால், மீண்டும் மேலே சொன்னபடி சென்று, செட் செய்து Update Automatically என்ற பெட்டிக்கு எதிரே உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.


சிஸ்டம் ரெஸ்டோர் (System Restore) சில குறிப்புகள்


விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரும் ஓர் அருமையான மீட்பு சாதனம் ""சிஸ்டம் ரெஸ்டோர்.” விண்டோஸ் ஏதேனும் பிரச்னையால், கிராஷ் ஆகி முடங்கிப் போகும்போது, இந்த சிஸ்டம் ரெஸ்டோர் நமக்கு உதவிடுகிறது. 

இதனை விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டமே உருவாக்கி வைக்கிறது. நாமாகவும் குறிப்பிட்ட சில நிகழ்வுகளில் சிஸ்டம் ரெஸ்டோர் பாய்ண்ட்களை ஏற்படுத்தி வைக்கலாம். 

சிஸ்டம் கிராஷ் ஆவது மட்டுமின்றி, கம்ப்யூட்டரில் வேறு பிரச்னைகள் ஏற்பட்டாலும், இந்த சிஸ்டம் ரெஸ்டோர் பயன்படுகிறது. விண்டோஸ் சிஸ்டம் நன்றாக இயங்கிய எந்த ஒரு நாளில் இருந்ததோ, அந்த நிலைக்கு சிஸ்டத்தினைக் கொண்டு செல்வதே, சிஸ்டம் ரெஸ்டோர் ஆகும். 

இதனைப் புரிந்து கொள்ள அது எப்படி செயல்படுகிறது என்பதனைத் தெரிந்து கொள்வது அவசியமாகும். இது குறித்த தகவல்களை இங்கு காணலாம்.

சிஸ்டம் ரெஸ்டோர் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வாக அமைய முடியாது. எடுத்துக் காட்டாக, நீங்கள் உருவாக்கிய அல்லது பயன்படுத்திய பெர்சனல் பைல்களை, தவறுதலாக அழித்துவிட்டால், அவற்றை மீட்டுப் பெறுவதில் சிஸ்டம் ரெஸ்டோர் உதவிட முடியாது. ஆனால், கம்ப்யூட்டர் சரியாக இயங்காத போது, முழுக்கவே இயங்காத போது இது பயன்படும்.

ரெஸ்டோர் பாய்ண்ட்ஸ்:

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம், தானாகவே வாரம் ஒருமுறை ரெஸ்டோர் பாய்ண்ட்களை ஏற்படுத்திக் கொள்கிறது. மேலும், ஏதேனும் புரோகிராம் அல்லது சாதனம் ஒன்றை கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து கொள்ளும் போதும், சாதனம் ஒன்றை இணைத்துப் பதிந்திடும் போது, அதற்கு முன்னதாகவே, இந்த சிஸ்டம் ரெஸ்டோர் ஏற்படுத்தப்படுகிறது. 

அத்துடன், ரெஸ்டோர் பாய்ண்ட் ஒன்றிலிருந்து நீங்கள் பழைய நிலைக்குக் கம்ப்யூட்டரைக் கொண்டு செல்ல முயற்சிக்கும் போதும், ரெஸ்டோர் பாய்ண்ட் ஒன்று ஏற்படுத்தப்படும். இதன் மூலம் நீங்கள் மேற்கொள்ளும் ரெஸ்டோர் பாய்ண்ட் இயக்கம், நீங்கள் எதிர்பார்த்தபடி அமையவில்லை என்றாலோ, அல்லது, மேலும் பிரச்னையைத் தருவதாக இருந்தாலோ, பழைய நிலைக்கே கம்ப்யூட்டரைக் கொண்டு செல்ல இது உதவும்.

ரெஸ்டோர் பாய்ண்ட்களில் விண்டோஸ் சிஸ்டம் பைல்ஸ், புரோகிராம் பைல்ஸ் மற்றும் ரெஜிஸ்ட்ரி செட்டிங்ஸ் ஆகியவை அனைத்தும் அமைக்கப்படுகின்றன. சிஸ்டம் ரெஸ்டோர் உங்களுடைய சொந்தப் பைல்களை ஒரு போதும் மீட்டுக் கொண்டு வரும் வகையில் அமைத்துக் கொள்ளாது. எனவே, எந்த ஒரு அவசர அல்லது ஆபத்து நிலையிலும், உங்களுடைய பெர்சனல் பைல்களை மீட்டு எடுக்க ரெஸ்டோர் பாய்ண்ட்டைப் பயன்படுத்தக் கூடாது. 

சிஸ்டம் ரெஸ்டோர் உதவிடும் முறை:

ரெஸ்டோர் பாய்ண்ட் ஒன்றிலிருந்து, சிஸ்டத்தை மீட்டெடுக்கையில், உங்களுடைய சிஸ்டம் பைல்கள், புரோகிராம் பைல்கள் மற்றும் ரெஜிஸ்ட்ரி அமைப்புகள் மீண்டும் அமைக்கப் படுகின்றன. அந்த குறிப்பிட்ட ரெஸ்டோர் பாய்ண்ட் ஏற்படுத்துகையில், இந்த பைல்கள் எந்த நிலையில் இருந்தனவோ, அவை மட்டுமே அமைக்கப்படும். எடுத்துக் காட்டாக, அந்த ரெஸ்டோர் பாய்ண்ட்டுக்குப் பின்னர், இன்ஸ்டால் செய்யப்பட்ட எந்த புரோகிராமும் இருக்காது. 

இதன் மூலம் புதிய சாதனங்களுக்கான ட்ரைவர், புதிய புரோகிராம் ஒன்றினை இன்ஸ்டால் செய்கையில், ஏதேனும் ஒரு பிரச்னையினால், அவை கம்ப்யூட்டர் இயங்குவதில் பிரச்னையை ஏற்படுத்தலாம். கம்ப்யூட்டரின் செயல்பாட்டினை முடக்கலாம். 

இவற்றை நீக்க இவற்றின் பைல்களை தேடி நீக்குவதனைக் காட்டிலும், இவை இன்ஸ்டால் செய்யப்படும் முன் ஏற்படுத்தப்பட்ட ரெஸ்டோர் பாய்ண்ட் ஒன்றுக்குச் சென்று, அங்கிருந்து சிஸ்டத்தை ரெஸ்டோர் செய்திடலாம். ரெஸ்டோர் பாய்ண்ட் ஒன்றைச் செயல்படுத்துகையில், மேற்கொள்ள வேண்டிய எச்சரிக்கை நடவடிக்கைகளை இங்கு காணலாம்.

சேப் மோடில் சிஸ்டம் ரெஸ்டோர்:

சிஸ்டம் ரெஸ்டோர், சில முக்கியமான சிஸ்டம் பைல்கள் வழி இயங்குகிறது. எனவே சிஸ்டம் இயங்குகையில், இவற்றை மீட்டு அமைக்க முடியாது. எடுத்துக் காட்டாக, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்று இதில் குறுக்கிட முடியும். எனவே, சிஸ்டம் ரெஸ்டோர் சரியாகத் தன் வேலையை முடிக்க இயலவில்லை என்றால், சிஸ்டத்தினை Safe Modeல் இயக்க வேண்டும். 

இதற்கு சிஸ்டத்தினை ரீஸ்டார்ட் செய்திட வேண்டும். ரீஸ்டார்ட் தொடங்குகையில் எப்8 கீயினை தொடர்ந்து அழுத்த வேண்டும். அப்போது Safe Modeல் தொடங்க ஆப்ஷன் தரப்படும். அதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். சேப் மோடில் ரெஸ்டோர் பாய்ண்ட் பயன்படுத்தினால், மீண்டும் அதனை பழைய நிலைக்குக் (Undo) கொண்டு வர இயலாது. 

ரெஸ்டோர் பாய்ண்ட்டில் கெட்டுப் போன பைல்கள்:

சிஸ்டம் ரெஸ்டோர் பாய்ண்ட் ஒன்றை தேர்ந்தெடுக்கையில், பிரச்னைகள் உங்கள் கம்ப்யூட்டரில் தொடங்கிய நாளுக்கு முன்னால் ஏற்படுத்தப்பட்ட ரெஸ்டோர் பாய்ண்ட்டைப் பயன்படுத்த வேண்டும். பிரச்னைக்குப் பின்னால் ஏற்படுத்தப்பட்ட ரெஸ்டோர் பாய்ண்ட்டைப் பயன்படுத்தினால், பிரச்னைகளும் சேர்ந்தே மீட்கப்பட்டு தரப்படும்.

ரெஸ்டோர் பாய்ண்ட் பயனளிக்காத போது:

எந்த ரெஸ்டோர் பாய்ண்ட்டும் உங்கள் கம்ப்யூட்டரின் பிரச்னையைத் தீர்க்கவில்லை எனில், விண்டோஸ் ரெகவரி டிஸ்க்கினைப் பயன்படுத்தி பிரச்னையைத் தீர்க்க முடியுமா எனப் பார்க்கலாம். வின்டோஸ் 7 சிஸ்டம் டிஸ்க்கினை இயக்கி, அதில் உள்ள system repair options பயன்படுத்தலாம். அல்லது விண்டோஸ் சிஸ்டத்தினையே முழுமையாகப் புதியதாக பதிக்கலாம். 

சிஸ்டம் ரெஸ்டோர் ட்யூனிங்:

விண்டோஸ் ரெஸ்டோர் தானாகவே, சிஸ்டம் இயங்கும்போது, பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும். இருப்பினும், நாம் விருப்பப்பட்டால், குறிப்பிட்ட நிலையில், சிஸ்டத்திற்கான ரெஸ்டோர் பாய்ண்ட்டை அமைக்கலாம். மேலும், ஹார்ட் டிஸ்க்கில் இடம் போதவில்லை எனில், பழைய ரெஸ்டோர் பாய்ண்ட்களை அழிக்கலாம். 

இதன் மூலம் கணிசமான இடம், ஹார்ட் டிஸ்க்கில் உருவாகும். சிஸ்டம் ரெஸ்டோர் என்பது அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு தரும் சாதனம் அல்ல. இதனை முழுமையாக நீக்கினாலும், சிஸ்டம் இயங்கும் என்றாலும், சிஸ்டம் ரெஸ்டோர் ஏற்படுத்தப்படுவது நமக்கு நிச்சயம் உதவும். 

எனவே அதிக இடம் எடுத்துக் கொள்ளாத நிலையில், ரெஸ்டோர் பாய்ண்ட் அமைக்கும்படி, சிஸ்டத்தை ட்யூன் செய்து வைத்திடலாம்.


Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes