இணையத்தில் விற்பனை

தகவல் தொழில் நுட்ப சேவையில் இயங்கும் நிறுவனங்கள், இணைய வெளியில் தங்களுக்கென ஒரு விற்பனை மையத்தை அமைப்பது இப்போது வழக்கமாகி வருகிறது.

முதலில் நோக்கியா, அடுத்து சாம்சங், இப்போது ஏர்டெல் என மொபைல் நிறுவனங்கள் தங்கள் ஆன்லைன் ஸ்டோர்களை அமைத்துள்ளன.

ஏர்டெல் அமைத்துள்ள விற்பனைத் தளத்தில், மொபைல் போன்கள், டிஜிட்டல் டிவி, பிராட்பேண்ட் இணைப்பு வசதிகள் எனப் பலவகை சேவைகளும் பொருட்களும் விற்பனைக்கு உள்ளன.

நோக்கியா மற்றும் சாம்சங் நிறுவனங்களின் இணைய தளங்களில் அந்நிறுவனங்களின்தயாரிப்புகள் மட்டுமே கிடைக்கும். ஆனால் ஏர்டெல் மற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளைத் தன் சேவை வசதிகளுடன் விற்பனை செய்கிறது. பிற நிறுவனங்களின் மொபைல் போன்களைத் தன்னுடைய சேவையுடன் இணைத்து விற்பனை செய்கிறது.

மற்ற இணைய தள கடைகளைப் போலல்லாமல், ஏர்டெல் நிறுவனம் நிர்ணயம் செய்துள்ள விலை, மற்ற தளங்களில் உள்ள விலைப்பட்டியலுடன் போட்டியிடும் வகையில் உள்ளது. எடுத்துக்காட்டாக, ஏர்டெல் நிறுவனத் தளத்தில், எல்.ஜி. ஆப்டிமஸ் மொபைல் போன் ரூ.16,403க்குக் கிடைக்கிறது.

ஆனால் பிளிப் கே ஆர்ட் தளத்தில், இதன் விலை ரூ.500 அதிகமாக உள்ளது. கூடுதலாக, ஒரு மாதத்திற்கு இலவச 3ஜி இணைப்பு கிடைக்கிறது. மொபைல் போன்களுக்கு 33% டிஸ்கவுண்ட், ஏர்டெல் பிராட்பேண்ட் இணைப்புகளுக்கு ரூ. 500 தள்ளுபடி, டிஜிட்டல் டிவி இணைப்பு களுக்கு ரூ.250 ரொக்க தள்ளுபடி எனப் பலவகை சலுகைகளும் வழங்கப்படுகின்றன.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes