மொபைல் சேவை பாதிக்கப்படுமா?

2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக, அண்மையில் உச்சநீதி மன்றம் பல நிறுவனங்களுக்கு அளித்த 122 உரிமங்களை ரத்து செய்தது. இதனால் தமிழ்நாட்டில் பாதிப்பு வருமா என்ற கேள்வி மொபைல் பயன்படுத்தும் அனைவரிடமும் எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் இயங்கும் கீழ்க்கண்ட நிறுவனங்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படும்.


1. யுனிநார்:

22 மண்டலங்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதில் உங்கள் சேவை இணைப்பு இருந்தால், இன்னும் நான்கு மாதங்களில் அதற்கான மாற்றினைத் தேடுவது குறித்து சிந்திக்கவும்.


2. வீடியோகான்:

21 மண்டலங்களில் பாதிப்பு ஏற்படும். இந்த நிறுவனம் தங்கள் சேவையில் எந்த பாதிப்பும் இல்லை எனத் தன் வாடிக்கையாளர்களுக்கு செய்தி அனுப்பியுள்ளது.


3. லூப் டெலிகாம்:

21 மண்டலங்களில் சிக்கல் ஏற்படும்.


4. எம்.டி.எஸ்.:

சிஸ்டமா ஷ்யாம் டெலிசர்வீசஸ் என்ற பெயரில் இதன் நிறுவனம் இயங்குகிறது. 21 மண்டலங் களில் உரிமம் பிரச்னைக்குள்ளாகியுள்ளது.


5. எடிசலாட் :

சியர்ஸ் மொபைல் எனவும் இதன் சேவை அழைக்கப்படுகிறது. 15 மண்டலங்களில் இதன் சேவை பாதிக்கப் படும்.


6. ஐடியா செல்லுலர் அண்ட் ஸ்பைஸ்:

13 மண்டலங்களில் இதன் சேவை பாதிப்பு இருக்கலாம்.

மேற்கண்ட நிறுவனங்கள் தமிழ்நாட்டில் சேவையினை வழங்கி வரும் நிறுவனங்கள். இவற்றிடம் சேவை பெற்றவர்கள் காத்திருந்து பார்க்கலாம். அல்லது மூன்று மாதங்களுக்குள் இதே எண்ணில் மற்ற நிறுவனங்களின் சேவைக்கு மாறலாம்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes