வெஸ்டல் வழங்கும் இ-ரீடர் சாதனங்கள்

சிங்கப்பூரில் இயங்கும் வெஸ்டல் கார்ப்பரேசன் நிறுவனத்தின் இந்தியப் பிரிவான வெஸ்டல் என்டர்பிரைசஸ் நிறுவனம், மாணவர்கள், அலுவலர்கள் மற்றும் நூல்களை விரும்பிப் படிப்பவர் களுக்கு உதவிட இ-ரீடர் மற்றும் இ-டைரி சாதனங்களை வடிவமைத்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னையில் இயங்கும் இந்நிறுவனப் பிரிவு, LeAF Basic, LeAF Mega, LeAF Galore, LeAF Touch, LeAF Touch Pro, LeAF Access and LeAF Android Tablets என்ற பெயர்களில் பல மாடல்களாக, இ-ரீடர் மற்றும் இ-டைரி சாதனங்களை யும், டேப்ளட் பிசிக்களையும் வெளியிட்டுள்ளது.

நூல்களைப் படிப்பதில் ஒரு டிஜிட்டல் புரட்சி ஏற்பட்டு வருகிறது. அச்சில் மட்டுமின்றி, நூல்கள் இப்போது டிஜிட்டலாகவும் இணைய வலைகளில் வெளியாகின்றன. மிகக் குறைந்த கட்டணத்தில் இவற்றை டவுண்லோட் செய்து இ-ரீடர் என்னும் சாதனத்தில் பதித்துப் படிக்கலாம்.

பல நூல்கள் இலவசமாகவும் கிடைக்கின்றன. கைக்கு அடக்கமாக இயங்கும் இந்த சாதனத்தில் பல்லாயிரக் கணக்கான நூல்களைப் பதித்து வைத்து, எங்கும் எளிதாக எடுத்துச் சென்று, தேவைப்படும்போது படிக்கலாம்.

இதனால் ஒரு நூலகமே நம் கைகளுக்குள் அடங்கிவிடுகிறது. இந்த நூலகத்தில் நம் விருப்பப்படி நூல்களைப் புதிதாகச் சேர்க்கலாம். படித்தவற்றை நீக்கி, இன்னொரு இடத்தில் பத்திரப்படுத்தலாம்.

அச்சில் நூல்களைப் படிக்கையில், அதன் பக்கங்களில், உங்களுக்குத் தோன்றும் கருத்துக்களை எழுதி வைக்கிறீர்களா! அப்படியானல் இதில் என்ன செய்வது என்று கேட்பவர்களுக்கு, இதிலும் பக்கங்களில் கருத்துக்களை, மிக எளிமையாகவும், வேகமாகவும் எழுத வசதிகள் செய்து தரப்படுகின்றன.

இந்த சாதனங்கள் அனைத்தும் 6 மற்றும் 9 அங்குல திரைகளுடன் வடிவமைக்கப் பட்டுள்ளன. கிரே கலரிலும், பல வண்ணங்கள் கொண்ட டிஸ்பிளே திரைகளுடனும் உள்ளன. வழக்கமான திரை, தொடுதிரை, குவெர்ட்டி கீ போர்டு, 3ஜி மற்றும் வை-பி தொழில் நுட்பம் எனத் தேவைக்கேற்ற வகையிலும், வாங்குபவரின் பட்ஜெட்டுக்கு ஏற்ற நிலையிலும் இவை வடிவமைக்கப்பட்டு விற்பனை யாகின்றன.

சில மாடல்கள் எம்பி3 ஆடியோ பைல்களையும் இயக்கு கின்றன. குறைந்த பட்சம் 2 ஜிபி மெமரி தரப்படுகிறது. இதனை 16 ஜிபி வரை அதிகப்படுத்திக் கொள்ள வசதியும் உண்டு. இந்த சாதனங்களின் தொடக்க விலை ரூ.8,999.

இந்நிறுவனம் வெளியிட்டுள்ள இ-டைரியில் பேப்பர் நோட்புக், டிஜிட்டல் பேனா மற்றும் பிளாஷ் மெமரி கொண்ட ஒரு சிறிய சாதனம் உள்ளது. தாளில் எழுதப்படும் குறிப்புகள் மெமரியில் வாங்கப்பட்டு, அவை பெர்சனல் கம்ப்யூட்டருக்கு மாற்றப் படுகின்றன. பின்னர் இவற்றை அப்ளிகேஷன் புரோகிராம்கள் மூலம், கம்ப்யூட்டரில் டெக்ஸ்ட்டாக மாற்றிக் கொள்ளலாம்.

இந்த சாதனங்கள் அனைத்தும், சென்னையில் உள்ள இந்நிறுவனத்தின் ஆய்வு மையத்தில், இந்திய வாடிக்கை யாளர்களின் தேவைகளை மையமாகக் கொண்டு வடிவமைக்கப் படுகின்றன. குறிப்பாக,நூல்கள் படிப்பவர்களுக்கு மட்டுமின்றி, மாணவர்கள், அலுவலகங் களில் பணிபுரிபவர்கள், வழக்குரைஞர் கள், மருத்துவர்கள், ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள் ஆகியோரின் தேவை களையும் இந்த சாதனங்கள் நிறைவேற்று கின்றன. இந்த மையமே, இச்சாதனங் களை இயக்குவதற்கான உதவி மற்றும் விற்பனைக்குப் பின் பராமரிப்பினையும் தருகிறது.

பதினெட்டு இந்திய மொழிகளை இவை சப்போர்ட் செய்கின்றன என்றும் இவற்றின் மெனுக்களும் அந்த அந்த மொழிகளில் தரப்பட்டுள்ளன என்றும் இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கணேஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். இந்த வகை சாதனங்களைப் பயன்படுத்தும் பழக்கம் படிப்போரிடையேயும், கற்போரிடையேயும் வேகமாகப் பரவி வருகிறது.

முதல் முதலாக இந்தியச் சூழ்நிலைகளுக்கேற்ப இவை வடிவமைக் கப்பட்டு வழங்கப்படுகின்றன. ஒருமுறை இந்த தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்திப் பார்த்தவர்கள், தொடர்ந்து பயன்படுத்தத் தொடங்கிவிடுவார்கள். தொடக்க நிலையிலேயே ஆண்டுக்கு 50,000 இ-ரீடர் சாதனங்களை விற்பனை செய்திட இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. மொபைல் போனுக்கு அடுத்தபடியாக, இ-ரீடர் சாதனங்கள் மக்களிடையே பரவும் வாய்ப்பு உள்ளது என கணேஷ் நாராயணன் கூறுகிறார்.

இந்த சாதனங்கள் குறித்து மேலும் தகவல்களை அறிய http://www.leafreader.com/main.php?page=lreaders என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திற்குச் செல்லவும்.சென்னையில் இந்நிறுவனத்தை 24342833 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes