திருட்டு வி.சி.டி. பார்க்கும் போலீஸ் அதிகாரி

டவுன்டவுன் பிலிம்ஸ் பி. லிட். வழங்க எஸ்.எஸ்.எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் "சினம்'. இதில் சத்யராஜ் கதாநாயகனாக நடிக்கிறார். நவ்தீப் இன்னொரு கதாநாயகனாக நடிக்கிறார். பூமிகா கதாநாயகியாக நடிக்கிறார். சத்யன், சிம்ரன்கான், கிம்சர்மா, ராகுல்தேவ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தெலுங்கு இயக்குநர் அருண்பிரசாத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்குகிறார்.

படத்தைப் பற்றி நடிகர் சத்யராஜிடம் கேட்டபோது...

""ஒரு கட்டத்துக்கு மேல் ஹீரோவாக நடிப்பதைத் தவிர்த்துவிட்டு வித்தியாசமாக நடிக்க வேண்டும் என முடிவெடுத்திருந்தேன். அதுதான் எனக்கும் நல்லது; தமிழ் சினிமாவுக்கும் நல்லது. அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் "சினம்' படத்தின் கதையை இயக்குநர் அருண்பிரசாத் கூறினார். நான் எதிர்பார்த்தது போலவே கதை அமைந்ததால் உடனே சம்மதித்தேன்.

இதில் வித்தியாசமான குணாதிசயம் கொண்ட சி.பி.ஐ. அதிகாரியாக நடிக்கிறேன். திருட்டு வி.சி.டி.யில் தமிழ்ப் படங்களைத் தேடித்தேடி பார்க்கும் கேரக்டர். அந்த சினிமா கதைகளை மையமாக வைத்தே என்னுடைய விசாரணை பாணியும் இருக்கும். படத்தில் ஆக்ஷன் காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளன. "குடியிருந்த கோயில்' படத்தில் இடம்பெற்ற "ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதுவே சுகம்...' என்ற பாடலை இசையமைப்பாளர் மணிசர்மா புதுமையாக ரீமிக்ஸ் செய்துள்ளார். இந்தப் பாடல் எம்.ஜி.ஆர். ரசிகர்களை மட்டுமல்லாமல் இளைய தலைமுறை ரசிகர்களையும் வெகுவாகக் கவரும்'' என்றார்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes