தோள் மூட்டு தேய்மானம்...! புது சிகிச்சை முறை வந்தாச்சு


மூட்டு வலி என்பது,முழங்கால் மூட்டு வலி மட்டும் தான் என்று நினைக்கக் கூடாது;உடலில் ஒவ்வொரு எலும்பு இணைப்பிலும் ஏற்படும் தேய்மானங்களும் மூட்டு பாதிப்பு தான்.முழங்கால்,முழங்கை,கணுக்கால்,இடுப்பு மட்டுமில்லாமல்,தோள் பட்டையிலும் மூட்டு தேய்மானம் ஏற்படும்.வயதானவர்களுக்கு,சில நோய்களால் பாதிக்கப்படுவோருக்கு இது நிச்சயம் ஏற்படும்.

தோள்பட்டை பாதிப்பு பல வகையில்,பல வயதினருக்கு ஏற்படுவதுண்டு.இதில் முக்கியமானது உறைந்த தோள் பட்டை மற்றும் தோள் பட்டை தேய்மானம்.

தோள் பட்டை தேய்மானத்துக்கு நவீன சிகிச்சை முறையில்,"மெட்டல் கப்" பொருத்தி செய்துள்ளார் எலும்பியல் நிபுணர் ஏ.கே.வெங்கடாச்சலம்."தோள்பட்டை மாற்று அறுவை சிகிச்சையே தேவையில்லை;சுலபமாக,ரத்தமின்றி,கத்தியின்றி சிகிச்சை செய்யலாம்" என்கிறார் இவர்.

வயதானவர்களுக்கு

தோள்பட்டை மூட்டு தேய்மானம்,பெரும்பாலும் வயதானவர்களுக்கு தான் ஏற்படும்.ஆனால்,முழங்கால் மூட்டு,இடுப்பு மூட்டு தேய்மானம் போல,இதுவும் அவர்களுக்கு சாதாரணமாக வரக்கூடியதுதான்.விபத்து போன்ற சூழ்நிலையால் இளம் வயதினருக்கு ஏற்படும்.இதை சரி செய்ய,தோள்பட்டை மாற்று அறுவை சிகிச்சை செய்வது தான் இப்போது பழக்கத்தில் உள்ளது.வழக்கமாக செய்யப்படும் தோள்பட்டை மாற்று அறுவை சிகிச்சையில் பாதிப்பு இருக்கும்.தோள் குருத்தெலும்புகளை மீண்டும் வளரச் செய்வதை புதிய முறை மூலம் எளிதில் செய்யலாம்.

இது இளம் தலைமுறையினருக்கு பெரிதும் பயனளிக்கக் கூடியது.வெளிநாடுகளில் செய்யப்படும் இந்த நவீன அறுவை சிகிச்சை இப்போது இந்தியாவில் அறிமுகமாகி வருகிறது.வெளிநாடுகளில் இருந்தும் நோயாளிகள் வந்து சிகிச்சை செய்து திரும்புகின்றனர்.சமீபத்தில்,தென் ஆப்ரிக்காவில் இருந்து சலேகா காடூம் என்ற பெண்,நாலைந்து ஆண்டு பாதிப்புக்குப் பின்,சென்னை வந்து அறுவை சிகிச்சை செய்து கொண்டு சொந்த நாடு திரும்பினார்.

குருத்தெலும்பு வளரும்

தோள் பட்டை தேய்மானத்தை சரி செய்ய நவீன முறையில்,"மெட்டல் கப்" பொருத்தப்படுகிறது.தோள்பட்டையில் அது நீண்ட நாள் பாதுகாப்பு அழிப்பது மட்டுமல்ல,குருதேளும்புகள் வளரவும் வழி வகுக்கிறது.குருத்தெலும்புகள் வளர்ந்து தோள்பட்டை பழைய படி ஆகி விட்டால்,"மெட்டல் கப்" பை நீக்கி விடலாம்.
இந்த "மெட்டல் கப்" எந்த வகையில் பக்க விளைவுகளை ஏற்படுத்தாது.மாறாக,எலும்புகளையும்,தசைநார்களையும் வளர அனுமதிக்கிறது.இதன் மூலம்,சில மாதங்களுக்கு பின்,இயல்பான தோள்பட்டை மீண்டும் உயிர் பெற்று விடுகிறது" என்றார் டாக்டர் வெங்கடாசலம்.

உறைந்த தோள் 

தோள் பாதிப்பு என்றாலே,பல பேருக்கு "உறைந்த தோள்பட்டை" பாதிப்பு தான் வரும்.தோள்பட்டை உறைவது என்றால்,ஏதோ உறைந்து போய்விடும் என்று எண்ண வேண்டாம்.தோள்பட்டை இறுக்கமாகி,எந்த வகையிலும் தூக்க முடியாமல்,பயன்படுத்த முடியாமல் போகும்.அதற்கு பெயர் தான் "உறைந்த தோள்பட்டை" என்பது.

விபத்து போன்ற காரணங்களாலும் ஏற்படும்;சிலருக்கு ஓசைப்படாமல் படிப்படியாக கூட ஏற்படும்.நாற்பது வயதில் இருந்து அறுபத்து ஐந்து வயதுள்ளவர்களுக்கு வரும்.வீக்கத்தில் ஆரம்பித்து,கையை தூக்க முடியாமல் போகும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு

சர்க்கரை நோயாளிகளுக்கு கண் பார்வை பாதிப்பு போன்றவை தான் ஏற்படும்.தோள்பட்டை உறைவதும் ஏற்படும்.எனினும்,மிகவும் மோசமாக உள்ள நோயாளிகளில் இருபத்து சதவீதம் பேருக்கு இந்த நிலை ஏற்படும்.


மாதக்கணக்கில் "உறைந்த தோள்" பாதிப்பு இருக்கும்.வலியில் ஆரம்பித்து போகப் போக தொலை நகர்த்த முடியாமல் போகும்.எக்ஸ்ரேயில் தெரிந்து விடும் என்றாலும்,பலருக்கும் முற்றிய நிலையில் தான் அது உணர முடிகிறது.
இந்த பாதிப்பு எட்டு மாதம் வரை தொடரும்.அப்போது அதிக வலி தெரியும்.சாதாரண பாதிப்பு தான் என்று நினைத்து,அதையும் உணராமல் இருந்து விட்டால்,பாதிப்பு அதிகமாக இருக்கும்.

சிகிச்சை எப்படி

சாதாரணமாக பாதிப்பு உள்ளவர்களுக்கு மருந்து சாப்பிட்டு வந்தால் போதும்.அத்துடன்,பிசியோதெரபி செய்ய வேண்டும்.அப்படி செய்து வந்தால்,நிச்சயமாக பாதிப்பு நீங்கும்.பல மாதங்களுக்கு இப்படி சிகிச்சை தொடர வேண்டும்.இல்லா விட்டால்,மீண்டும் மீண்டும் பாதிப்பு வரத்தான் செய்யும்.அதிக பாதிப்பு இருந்தால்,அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும்.அப்போது,பாதிக்கப்பட்ட குருத்தெலும்பு பகுதி நீக்கப்பட்டு சரி செய்யப்படும்.இதற்கு "ஆர்த்ரோஸ்கோபிக்" அறுவை சிகிச்சை முறையில் ஆபரேசன் செய்யப்படும்.சிறிய துளையிட்டு,குழாய் செருகப்படும்.அதில் பொருத்தப்பட்ட கேமராவில் பார்த்தபடி சிகிச்சை செய்யப்படும்.





0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes